உனது கசந்த , திருகலான பொய்களால்
உன் வரலாற்றில் என்னை
உதிர்த்துவிடலாம் என்று நினைக்கிறாய்
எனது வெட்கங்கெட்ட தனம் உன்னை நிலை குலைய வைக்கலாம் ....
கண்ணீர் சொட்டுடனும்
என் தோள்கள் சரியவும்
ஆத்மார்த்தமான கதரல்களால் நான் சரிய
குனிந்த தலையோடும்
தாழ்ந்த கண்கள் உடனும்
நான் நொறுங்கி போவதை பார்க்க விரும்புகிறாயா ???
அல்லது
சமூகம் விரும்புகிறதா ????
எனது கவிதை செருக்கு உனக்கு காயம் ஏற்படுத்தலாம் .......
என்னுடைய நமட்டு சிரிப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை குறைக்கலாம்..
வரலாற்றின் அவமான குடிசைகளில் இருந்து எழுதுகிறேன்
வேதனைகளில் வேர் விட்டிருக்கும் மனதில் இருந்து எழுதுகிறேன்.............
திகிலான அச்சம் தரும் இரவுகளை பின் தள்ளி எழுதுகிறேன்............
அதிசயத்துடன் புலரும் காலையில் நான் எழுதுகிறேன் .............
தோல்வியின் அடிமையாக எழுதுகிறேன்..............
என்
வெற்றியை பிடுங்கிய சமுதாயத்தில்
ஏதும் செய்ய இயலாமல் எழுதுகிறேன் ....
உன்னாலும் எனக்கு உதவ முடியாத தருணத்தை
நம்ப முடியாமல் ஏற்றுக்கொண்டு
எழுதுகிறேன்.....
நான் எழுதுகிறேன் ........
மேலும்
நான் இருகிறேன்
இன்னும் இருகிறேன்...........
இருந்தும்
நான் இருகிறேன்...
சமுதாயத்தில் என்னை மறைத்து கொண்டு.................
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக