வெள்ளி, 12 டிசம்பர், 2008

.......தனிமை .......

தனிமை

உன்னை பற்றி சிறிது எழுதலாம் என்று நினைக்கிறேன்,

நீ எனக்கு இழைக்கும் இன்னல்களை பற்றி,

நீ எனக்கு வழங்கும் ஞானத்தை பற்றி,

உன்னால் நான் உணரும் உணர்வை பற்றி,

நீ எப்படி என்னுள்

நுழைந்தாய்?


கலந்தாய்?


நான் உன்னை வென்று விட நினைத்தேன்


ஆனால்


நீ


என்னை கொன்று விட்டாய்.....



உன்னிடம் நான் தோல்வி அடைவேனோ

என்று அஞ்சுகிறேன்


ஆனால்


அஞ்சுவது


பேதைமை என்பதால்


தோல்வியை உனக்கு பரிசளிக்க விரும்புகிறேன்....


நீ எனுடநேயே வாழ்கிறாய்

ஆனால்


மனிதர்களிடம் மறைந்து கொள்கிறாய்,



ஏன் நிழலை போல


நீயும் நிழல் போல படிகிறாய்



உன்னால்



நான் படும் உள்ளக் குமுறல்களை


எழுதுவதை தவிர என்னால்



ஏதும் செய்ய முடியாது....

நீ


எனக்கு


ஆசிரியனாக ,



நண்பனாக,



பகைவனாக ,


இறைவனாக,



மாசு மருவற்று இருகிறாய் ...


ஆனாலும் கூட உன்னை எனக்கு பிடிக்கவில்லை.....

கண்டிப்புடன் கண்காணிக்கும்

எவரையும்


யாருக்கும் பிடிக்காது....



உறங்குவதற்கு
இமைகளை
இணைக்கும்
தருவாயில்
உன்னை
உணருகிறேன் ...


உறக்கத்தின்
நடுவில்
உன்னை
உணர்கிறேன் ....



உறங்கி
விழிக்கையில்
உன்னை
உணர்கிறேன்.....




நீ தரும் பலன்

கொஞ்சமா?
நஞ்சமா?



பொறுமையை போதிக்கிறாய்,

யோசிக்க வைக்கிறாய்,

யோசித்ததை யோசிக்க வைக்கிறாய்,


சில நேரம் புரிய வைக்கிறாய்,


பின்பு,


புரியாததை புரிய வைக்கிறாய்,


என்னை பற்றியும் புரிய வைக்கிறாய்,,,,,



எதுவானாலும்

உன்னை வெற்றிகொள்ள





உன்னிடம்









தாழ்ந்துஇருக்கிறேன்




ஆனால்


தனிமையே




உன்னிடம்


தாழ்ந்து இருக்கிறேன்


ஆனால்



வீழ்ந்து விட வில்லை............




தனிமையைபற்றி



தமிழன்


நிவாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக