சென்ற வாரம் தமிழ் சங்கத்தில் ஒரு சொற்பொழிவு நடந்தது ....என்னுடைய கருத்துகளுக்கு வலு சேர்க்கும் என்ற ஆவலில் சென்றேன்.......
ஆத்திகவாதிகளும் , நாத்திகவாதிகளும் கலந்து கொண்டார்கள்.
கடவுள் உண்டு என்ற வாதமும் கடவுள் இல்லை என்ற வாதமும் ஒரே மேடையிலே ஒலித்தால் எப்படி இருக்கும்??
இருவரும் எவாறு தங்களுடைய கருத்தை முன் வைப்பார்கள் தங்களுடைய கருத்தை அறிவுபூர்வமாக எடுத்து வைப்பார்களா? அல்லது உணர்ச்சி பூர்வமாக எடுத்து வைப்பார்களா என்று எண்ணி கொண்டு சென்றேன்.....
சில கருத்துக்கள்,
ஏன் கடவுள் இல்லை என்று சொல்கிறாய் ?
ஏன் கடவுள் இல்லை என்று சமுதாயத்தில் குழப்பம் விளைவிகிறாய்??
நான் எங்கே அப்பா அப்படி சொன்னனேன்?
பரிசுத்த ஆவியை , பிதாவை வழிபடும் கிறிஸ்துவர்களிடம் சென்று சிலை வழிபாடை ஏற்று கொள்ள சொன்னால் ஏப்படி அவர்களால் ஏற்று கொள்ள முடியும்... ???
திசையை வழிபடும் முஹமதியர்களிடம் சென்று பிதா , பரிசுத்த ஆவியை வழிபட சொல்ல முடியுமா ???
ஆயிரகணக்கான கடவுளர்களை தனிடம் வைத்துள்ள இந்து மதத்தை வழிபடும் நண்பரிடம் சென்று சொன்னால் என்ன வாகும்??( தற்போது கிரிக்கெட் வீரர் டோனிகு ராஞ்சியில் சிலர் கோவில் கட்ட ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன????)
இவர்கள் யாரும் பிற மத வழிபாடுகளை ஏற்று கொள்வதே இல்லை......
இவர்கள் மூவர் சொல்வதையும் சேர்த்து நான் சொல்கிறேன்.......
கடவுள் இல்லை என்று.........
இது எப்படி சமுதாயத்தில் குழப்பம் விளைவிக்கும் ?????
"Atheist are important to rejuvenate each religion"......
அடிமைக்கு உடல் மட்டுமே மற்றவனுக்கு அடிமை......
ஆனால்
பக்தி மானுக்கு உடல் , மனம்
இரண்டுமே மற்றவனுக்கு அடிமை ஆகிவிடுகிறது....
ஐந்து வயது சொந்தமாக சிந்திக்க தெரியாத குழந்தையிடம் ஒரு பொருளை காட்டி கும்பிட சொல்வதும், அதற்கு பூஜைகள் செய்ய கற்று கொடுப்பதும்...... ஆத்திகர்களில் பனி...
நானோ இருபது வயதுடைய சிந்திக்க தெரிந்த மனிதனிடம் தான் கடவுள் இல்லை என்று சொல்கிறேன்.....
இதில் எது மிகப்பெரிய பாவம் ???
ஐந்து வயது குழந்தையிடம் கருத்தை கட்டாயம் செய்ய சொல்வதா ??
அல்லது
சிந்திக்க தெரிந்த மனிதனிடம் கருத்தை சொல்வதா?
தொடரும் .........

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக