செவ்வாய், 22 மார்ச், 2011

hello

yen iniya akkaaviRgu

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

இனிய நண்பர்க்கு வணக்கம், பல நாட்களாக என்னுடைய வலைபதிவில் எதுவும் எழுதுவதில்லை என்று என் நண்பர்கள் குறை கூற ஆரம்பித்து விட்டனர்.
நானும் என்னுடைய நேரம் போதாமையை சொல்லி சமாளித்து வருகின்றேன்.
உங்களுடைய பதிவை பார்க்க வேண்டி வந்தது.
உடனேயே என்னுடைய தாக்குதலை தொடங்கி விட்டேன்.
உங்கள் மீது அல்ல உங்கள் எழுத்துக்கள் மீது.

உங்களின் பதிவை படித்தவுடன் , கிராமங்களில் சில பெரிசுகள் திண்ணையில் உட்கார்ந்து அரட்டை , அல்லது புரணி பேசுவது என்னுடைய நினைவிற்கு வந்து தொலைகிறது.


உங்களுடைய பதிவையே மூன்று பகுதிகளாக பிரிகின்றேன்.

முதலாவது,
ரஜினியை ( எந்திரனை)தாக்கி எழுதி இருபது.

இரண்டாவது
தமிழ் சங்கத்தை தாக்கி எழுதி இருப்பது.

மூன்றாவது

ஞாசம்பன்தனை தாக்கி எழுதி இருப்பது.


நீங்கள் கில்லாடி தான் தோழரே,

ஏனா,

ரஜினியை தாக்கி எழுதி இருப்பதால் அவர் உங்களுக்கு பின்னூட்டம் போட போவது இல்லை.உங்களுக்கு அவர் தன்னுடைய கண்டனத்தை தெரிவிக்க போவது இல்லை,இல்லாட்டி, ஜாகுவார் தங்கத்தின் வீட்டை தாக்கியது போல யாரும் தாக்க போவது இல்லை, அவர் உங்களை சட்டை செய்ய போவதும் இல்லை,


ஞான சம்பந்தன் கதையும் இப்படி தான்,
நீங்கள், கண்டனம் செய்வது ,குப்பை என்று சொல்லாமல் சொல்வது எல்லாமே இந்த தைரியத்தில் தான்.

தமிழ் சங்க உறுப்பினர்கள், சில பேர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு எல்லா மேடை மரியாதை செய்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள்.
ஏன் பெயரை வெளியிட வில்லை தோழரே,?


பயமா???

சிலர் யார் என்று எங்களுக்கு காண்பித்தால் எங்களை போல பலருக்கு உபயோகமாக இருக்கும் தோழரே,,,,

ரஜினி , ஞான சம்பந்தன் பற்றி நீங்கள் எழுதியது ஒன்னும் நடக்காது என்ற தைரியத்தில் ........

தமிழ் சங்கத்தை பற்றி நீங்கள் எழுதியது மறைமுக பயத்தில்.......


உங்களுக்கு பின்னூட்டம் செய்தவங்களும் இது தான் செய்றாங்க.....





சரி விசயத்துக்கு வர்ரேன்.....


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,,,,,



இப்பவே கண்ண கட்டுதா??????




இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே நான்......




ரஜினி பத்தி பேசலாம்,

நீங்க ரஜினி ரசிகர் இல்லைன்னு சொன்ன நாங்க கேட்டுட்டு போகபோறோம்
அவர் முதியவர், பட வெளம்பரம் அப்டின்னு சொல்லி தாக்கி எழுதி இருக்கீங்க.....

நீங்க பட வெளம்பரம் பாத்தே பயப்படுறீங்க......
நாங்க படமே தைரியமா பாக்க போறோம்....

நீங்க படம் வெளிவந்து அத விமர்சனம் பண்ணி இருந்தாலோ, அந்த படத்தின் உடைய வியாபார விசயத்த பத்தி சொல்லி இருந்தாலோ, மாறன் சகோதரர்களின் பட ஏகாதிபத்தியத பத்தி சொல்லி இருந்தாலோ சரின்னு சொல்லலாம்.....


ஆனா குழந்த பிறப்பதற்கு முன்னமே பேர் வைக்ரமாதிரி இருக்கு.....உங்க விமர்சனம்....

என்ன நான் சொல்றது......



அப்ப நீங்க சொல்ல வர்றது , விமர்சனம் இல்ல ,தாக்குதல்,,,,,,


ஞான சம்பந்தனுக்கு வர்ரேன்....

முதல்ல என்ன தலைப்புனே தெரியாம வந்து தமிழ் சங்கத்துக்குள்ள வந்து உக்காந்துட்டு இருக்கீங்க....

தமிழ் சங்கதுதுல பல பேரோட தொடர்புள்ள இருக்றவர்,

நிரய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் விஷயம் தெரிஞ்சவர் இப்படி சொல்லலாமா???

இது எப்படி இருக்குனா, பரீட்சை என்னான்னு தெரியாமலயே பரீட்சை எழுத வந்து உட்காந்த மாதிரி இருக்கு....



/////////
இரண்டாம் வரிசையில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் (!) நாங்கள் இருக்கும்போது வடக்கு வாசல் ஆசிரியர் பென்னேஸ்வரன் அங்கு வந்தார். அவர் இது போன்ற ஆபத்துகளில் சிக்காதவர் ஆயிற்றே ..என்று வியந்தபோது ///////


ஆசிரியர் பென்னேஸ்வரன் இது போன்ற ஆபத்துகளில் சிக்காதவர் என்று நீங்கள் சொல்வதிலிருந்தே, நீங்கள் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னமே ஒரு முடிவோடு தான் நீங்கள் உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று முடிவாகிறது...



//////
வெறுத்துப்போன நாங்கள் திரும்பி பார்க்க , பென்னேஸ்வரனின் இருக்கை ..காலியாய் இருந்தது.

பிறகு நாங்களும் பின்னங்கால் பிடரியில் அடிக்க தலைதெறிக்க ஓடி தத்தம் வீடுகளுக்குள் (ரூம்..!) சென்று தஞ்சம் அடைந்தோம். ////////



அவர் கிளம்பியவுடன் நாங்களும் கிளம்பிட்டோம்னு சொல்லி இருக்கலாம் அத விட்டுட்டு ஞான சம்பந்தனை குறை கூறுவது சும்மா.......



கிரிக்கெட் போட்டியில் முதல் ஐந்து விக்கட் விழுந்த பிறகு இந்த போட்டியில் தோல்வி தான்னு நீங்களா டிவி ய ஆப் செய்த கதை தான் இது......


கடைசி ஓவர்ல சிக்ஸ் அடிச்சு மேட்ச் ஜெயிக்க வச்சதா பாக்காம போட்டி நல்லா இல்லன்னு சொன்னா எப்படி தோழரே....



இதுல இருந்து உங்களுக்கு பொறுமை கம்மின்னு சொல்லாம சொல்லிடீங்க...


இன்னும் பல குறை உங்க பதிவுல பாக்க முடியுது.....

ஆனா ஒன்னு

என் தாக்குதல் உங்கள் மீது அல்ல உங்களின் தாக்கி எழுதும் எழுத்துக்கள் மீது......

உங்களுடைய அடுத்த தாக்குதலை எதிர் நோக்கி காத்திருக்கும்

அன்புடன்
தோழன் நிவாஸ்.....
iniya nanbarku vanakkam

வியாழன், 31 டிசம்பர், 2009

நீண்ட நாட்களுக்கு பிறகு

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் என்னுடைய வலைப்பதிவை தொடர்கிறேன்.

வியாழன், 16 ஏப்ரல், 2009

எனக்கான கவிதையை நீயே எழுது தோழி....

உன்னை பற்றிய ஏன் நினைவுகளை
சில வலிகளையும்
சில நினைவுகளையும்,
சில சந்தோச தருணங்களையும்....
நான் இழந்து விட்ட உணர்ச்சி பற்றியும்.... நீயே எழுதி விடு...
ஏன் கற்பனைகளையும்...
உன் மீதான ஏன் கற்பனைகளையும்
நீயே எழுதிவிடு...
என்னை நீ நிராகரித்தது பற்றி
உன்னை நான் இன்னும் அதி தீவிரமாய் ஏற்று கொள்வது பற்றியும் அதன்
கோமாளித்தனத்தையும்

எனக்கு நீ உதவ முடியாததை பற்றி.....


சமுதாயத்தின் கோர பற்களுக்கு இரையான உன் மீதான எனது பிரியத்தையும்
நீயே எழுதி விடு..

நீ யாசிக்கும் நம்முடைய நட்பு,
அதனால் பரி போகும் என்னுடைய கனவுகளை பற்றியும் நீயே எழுதி விடு...




அடுத்த கட்ட சோதனைகளை பற்றியும் நீயே எழுதி விடு...





உன் ஆசைகளுக்கு கட்டு படாத என்னுடைய ஆசைகளை பற்றி ,


என்னுடைய கண்களும், என்னுடைய நினைவுகளும்
கவனமின்றி உன்னை தொட்ட ஏன் கைகளும்,
உன்னை தொட நினைத்த செயல்களும்.....

அது உனக்கு தொல்லை கொடுப்பதை பற்றி....




உன் கண்களும் கநீரை காணும் என கனவு காணும்
என்னுஇடைய கண்ணீரையும் சேர்த்து கவிதை சேர்த்து காரணம் இல்லாமல் நீயே எழுதி விடு....










உற்றார் , உறவினர் உடன் இருக்கும்
நகைத்து இருக்கும் சம்யதில்லும்....
உன் உயிரின் அன்பான பிடியில்


உன் உயிருடன் கலந்திருக்கும் இன்ப வேலை களிலும்,

காலம் உனக்கு ஏற்பத்தி இருக்கும் வேலைகளுக்கு மத்தியிலும்,



கஷ்டத்தின் மத்தியில் ,

இன்பதிற்கு மத்தியில்
இதை பற்றி எழுத எங்கே உனக்கு நேரம்

ஆனாலும் கவலை கொல்லாதே ஏன் கவிதைகளை பற்றி யோசித்தாவது விடு...






யோசிப்பதற்கு நேரம் எடுத்து கொள்ள தயக்கம் இருந்தால்
நீ தலை கோதும் நேரம் காற்றில் எழுதிவிடு....




திங்கள், 13 ஏப்ரல், 2009

ஜாதி.........

இந்தியாவை பொறுத்தவரை எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது. அப்புறம் எதுக்கு தேவையில்லாமல் வர்க்கம், வர்க்கம் என்று பேசுகிறார்கள்?


திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது.

திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது


ஆனால் தனக்கு வர இருக்கிற துணை தன் ஜாதிக்காரராக இருந்தால் மட்டும் போதாதது, தன்னைப் போல் வசதியான அல்லது தன்னை விட வசதியானவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்களே, அது என்ன ஜாதி உணர்வா?

தன் ஜாதிப் பெண்ணாக தேடி மணம் முடித்துக் கொண்டபின் வரதட்சணை கேட்டு துன்புறுத்தகிறார்களே, அவர்கள் எல்லாம் வேறு ஜாதிக்காரர்களா?

“நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்” என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.


“நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்” என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.


“நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்” என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.



ஜாதி விட்டு கல்யாணம் பண்ண தயாராக இருக்கிறவர்கள் கூட வர்க்கம் பேதம் கடந்து கல்யாணம் முடிக்க தயாராக இல்லை.‘டாக்டருக்குப் படித்திருக்கிற, மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பதிக்கிற, நல்ல அழகான மணமகளுக்கு-நல்ல வேலையில் உள்ள மாதம் 30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிற வசதியான மணமகன் தேவை. ஜாதி தடையில்லை.’ இந்த விளம்பரங்களை நீங்க பாக்கறதில்லையா?

ஜாதி மாறி கல்யாணம் முடிச்சக் கூட, கலெக்டர் கலெக்டராதான் முடிப்பாரு. இல்லைன்னா டாக்டரை முடிப்பாரு.
சுய ஜாதியில் தன் படிப்புக்கும் தன் அந்தஸ்துக்கும பொருத்தமாக பெண் கிடைக்காததால், வேறு ஜாதியில் ‘தகுதி-திறமையான’ பெண்ணை கட்டிக் கொண்டு, தன் ஜாதி மக்களுக்காக ‘பாடுபடுகிற’ ஜாதிய உணர்வாளர்களும் இருக்கதானே செய்கிறார்கள். கிரிமனல்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் பாதுகாப்புத் தருகிற ஜாதி சங்கங்கள், தன் ஜாதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதில்லையே.


இவ்வளவு ஏன்?


கொலை செஞ்ச ஜெயேந்திரனுக்கு ஆதரவா போராடுன பிராமணர் சங்கம், கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன் அய்யருக்கு ஆதரவா வரலையே ஏன்? அதாங்க வர்க்க பாசம்.

நன்றி மதிமாறன்.....

தாஜ்மஹால்